நம்ம கல்வி
  • Home
  • About
  • Study Materials
    • 9th Materials
    • 11th Materials
    • 10th Study Materials
    • 10th Question Papers / Keys
    • 12th Study Materials
    • 12th Question Papers / Keys
    • TRB TET & TNPSC Materials
  • News
    • Educational News
    • General News
  • Submit your Material
  • Contact Us

1/30/2018

Incredible exercises to help the student not to forgot! HOW TO REMEMBER WELL!!

0 Comments

Read Now
 
மாணவர்களின் மறதியை விரட்ட உதவும் மகத்தான பயிற்சிகள்! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் தங்களுக்கு நினைவாற்றல் திறன் இல்லை என்று முடிவு செய்துவிடுகிறார்கள். 'நன்றாகத்தான் படித்தேன், ஆனால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. தேர்வு எழுதும்போது பதில்கள் மறந்துவிடுகின்றன. அதனால் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற முடியவில்லை' என எத்தனையோ மாணவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் 10 வருடங்களுக்கு முன்பு பார்த்த ஒரு திரைப்படத்தின் கதையை இப்போது கேட்டாலும் சொல்ல முடிகிறது. அதே போல் ஒரு படத்தின் பாடல் வரிகளை ஞாபகமாக சொல்ல முடிகிறது என்றால் உங்களுக்கு சிறப்பான நினைவாற்றல் இருக்கிறது என்றுதானே அர்த்தம். உங்களுக்கு எதில் ஆர்வமும், விருப்பமும் இருக்கிறதோ? அதைப்பற்றி எப்போது கேட்டாலும் உங்களால் கூற முடியும். திரைப்படத்தின் மேல் உள்ள ஆர்வமும், விருப்பமும் தான் உங்களால் அந்த திரைப்படத்தின் கதையையோ, பாடல் வரிகளையோ உடனே சொல்ல முடிகிறது.

அதுபோலவே நீங்கள் படிக்கும் படிப்பையும் ஆர்வத்துடன், விருப்பத்துடன் படித்தால் கண்டிப்பாக எப்போதுமே மறதி ஏற்படாது. ஒரு நூலகத்திற்குச் சென்று அங்குள்ள நூலகரிடம் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை கேட்கும்போது அங்கு ஏராளமான புத்தகங்கள் இருந்தாலும் நீங்கள் கேட்ட புத்தகத்தை உடனே எடுத்து கொடுத்துவிடுகிறார். அது எப்படி முடிகிறது என்று பார்த்தால், அங்கே புத்தகங்களை வரிசைப்படுத்தி சீராக அமைத்திருப்பதுதான் காரணம். எவ்வளவு புத்தகங்கள் இருந்தாலும் அதை சீராக வரிசைப்படுத்தி வைத்திருந்தால் எந்த புத்தகத்தையும் எடுப்பது மிக எளிது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

அது போன்றுதான் நமது நினைவுகளை, பதிவுகளாக மாற்றி ஒழுங்காக வரிசைப்படுத்தி வைத்தால் அது நீண்ட காலம் வரை நினைவில் இருக்கும். அவ்வாறு இல்லையென்றால் சிறிது காலத்தில் மறந்து போய்விடும். நினைவுப் பதிவுகளை வரிசைப்படுத்தியவர்கள் சிறந்த நினைவாற்றல் மிக்கவர்களாக திகழ்கிறார்கள். உலக சாதனை புரிந்தவர்கள் மற்றும் குறைந்த வயதிலேயே சிறப்பான நினைவாற்றல் உள்ளவர்கள் தங்கள் நினைவு பதிவுகளை வரிசைப்படுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களது நினைவாற்றல் சிறப்பான முன்னேற்றத்தை காண ஒரு எளிய பயிற்சி முறையை நீங்கள் மேற்கொள்ளலாம். காலை சிற்றுண்டி முடித்தவுடன், தூங்கி எழுந்தது முதல் சிற்றுண்டி முடிக்கும் வரை நீங்கள் செய்த செயல்களை வரிசையாக 2 நிமிட நேரம் நினைவுபடுத்தி பார்க்கவும். பின்னர் உங்கள் பணியை தொடரவும். அதே போல் காலை சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் உள்ள இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் செய்த செயல்களை, மதிய உணவு நேரத்தில் வரிசையாக நினைவுபடுத்தி பார்க்கவும்.

அதே போல் மாலையிலிருந்து இரவு உணவு உண்ட நேரம் வரை நீங்கள் செய்த செயல்களை தூங்கும் முன் வரிசையாக நினைவுபடுத்தி பார்க்கவும். இந்த நினைவாற்றல் பயிற்சியை ஒரு மாத காலம் செய்து வந்தால், உங்கள் நினைவாற்றல் நம்ப முடியாத அளவு வளர்ந்திருப்பதை உணர முடியும். இந்த பயிற்சிமுறை உங்கள் நினைவாற்றல் திறனை மட்டும் அல்லாமல் உங்களது நேர மேலாண்மையும் அதிகரிக்கும். எப்படி என்றால் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் வரிசைப்படுத்தி நினைவுபடுத்தும் போது அன்றைய பொழுதில் வீண் அரட்டை, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் போன்றவற்றில் நீங்கள் வீணடித்த நேரங்கள் உங்கள் கவனத்திற்கு வரும்.

அவற்றை நீங்கள் தானாகவே தவிர்த்து விட இந்த பயிற்சி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இதே போன்று மேலும் சில பயிற்சிகளை பார்ப்போம். மொத்தமாக உள்ள பாடத்தை நமக்குப் புரியும் வகையில் பகுதிவாரியாக பிரித்துக் கொள்ளலாம். இப்படிச் செய்வதால் நினைவில் அதிக பாரம் இல்லாமல் பதிந்துகொள்ள முடியும். அத்துடன் பகுதி பகுதியாக பிரித்து வைத்து சிறுபகுதியாக படிப்பதால் மறதி இல்லாமல் அனைத்தையும் தேர்வில் எழுத முடியும்.

​மற்றொரு பயிற்சி முறை என்னவென்றால், படிக்க வேண்டிய பதிலை இரண்டு தடவை படிக்க வேண்டும். இப்போது புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நாம் படித்த பாடத்தை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். பதியவில்லையெனில், அந்த பாடம் மேலோட்டமாக சொல்லும் கருத்து என்ன என்பதை முதலில் கவனிக்க வேண்டும். மீண்டும் இரண்டு முறை படிக்க வேண்டும், நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் படித்த பாடம் மனதில் பதியும்.

படித்ததை நண்பர்களிடம் பகிர்வது மிகவும் சிறந்த நினைவாற்றல் பயிற்சி ஆகும். இதனால் நினைவில் உள்ளது வாய்மொழியாக வெளிப்படும் போது ஐந்துமுறை படித்ததற்கு சமமாகிறது. பாடங்கள் படிக்கும் போது புரியாத வார்த்தைகளோ அல்லது வாக்கியங்களோ வந்தால் அதை நீங்கள் உங்களுக்கு புரிந்த வார்த்தை அல்லது வாக்கியங்களுடன் தொடர்புபடுத்தி படித்தால், புரியாத வாக்கியங்களும் நினைவில் பதியும்.

தேர்வு எழுதும்போது மறதி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நினைவாற்றல் பயிற்சிகளை தொடர்ந்து கடைபிடித்து, படிக்கும் பாடத்தை மனப்பாடம் செய்து படிக்காமல் புரிந்து படிக்க வேண்டும். புரிந்து படிக்கும் முறையை எளிய முறையாக நமது தாய்மொழியில் படிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு படிக்கும் பாடம், எப்போதும் மறக்காமல் நமது நினைவில் பதிந்து வாழ்வில் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

- பேராசிரியர், முனைவர், அ.முகமது அப்துல்காதர், சென்னை.

Share

0 Comments
Details

    NAMMA KALVI

    Important Blog Posts

    POSTS

    December 2018
    March 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    September 2017

READ EDUCATIONAL NEWS - CLICK HERE

QUICK LINKS

  • HOME​
  • about us
  • NEWS
  • SEARCH STUDY MATERIALS
  • 9th | 10th | 11th | 12th
  • UPLOAD OR SEND YOUR MATERIALS​​
  • online text books
  • REPORT AN ERROR
  • advertise in namma kalvi​​
  • CONTACT US


Namma Kalvi Logo

NAMMA KALVI.ORG

Welcome to the bottom! Search below and go to the Top!
Namma Kalvi Search


Share on

MORE INFO



Namma Kalvi Video Classes
Why need tuition centre?
9th, 10th, 11th and 12th online quiz, video classes, audio songs, lesson videos, teaching videos and more
Click Here

Follow Namma Kalvi on

Sitemap
www.nammakalvi.org ©FEB2019

Time in Tamil Nadu:
  • Home
  • About
  • Study Materials
    • 9th Materials
    • 11th Materials
    • 10th Study Materials
    • 10th Question Papers / Keys
    • 12th Study Materials
    • 12th Question Papers / Keys
    • TRB TET & TNPSC Materials
  • News
    • Educational News
    • General News
  • Submit your Material
  • Contact Us